பார்வையற்றோர் வழிகாட்டுதலுடன் நடந்த கார் பேரணி : பிரெய்லி கையேட்டை படித்து வழிகாட்டிய பார்வையற்ற மாணவர்கள்
மதுரையில் பார்வையற்றவர்கள் வழி காட்டுதலுடன் நடைபெற்ற கார் பேரணி, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மதுரையில் பார்வையற்றவர்கள் வழி காட்டுதலுடன் நடைபெற்ற கார் பேரணி, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பார்வையற்றோர் கூட்டமைப்பு 6-வது ஆண்டாக நடத்திய இந்த பேரணி, தல்லாகுளம் பகுதியில் தொடங்கி சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்களும், பார்வையற்ற மாணவர்களும் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்கள், பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட வழித்தடங்களை படித்து கூறி, கார் ஓட்டுநரை வழிநடத்தினர். பேரணி முலம் திரட்டப்படும் நிதி, ஏழை மாணவர்களுக்கும், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
Next Story