கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை - பிரசவம் பார்த்த ஆண் செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

தேனி அருகே ஆம்புலன்சில் சென்ற கர்ப்பிணிக்கு ஆண் செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரசவம் பார்த்தனர்.
கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை - பிரசவம் பார்த்த ஆண் செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்
x
குமுளி அருகே உள்ள ஹெவி என்ற பகுதியில் வசிக்கும், மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி அம்பிளிக்கு, பிரசவ வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்  ஜீப்பில் வண்டிப்பெரியாறு சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பிரசவம் பார்க்க முடியாத நிலையில், காஞ்சிரப்பள்ளி பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்புலன்சில் சென்ற போது அம்பிளிக்கு பிரசவ வலி அதிகமானதால், ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தி விட்டு அதில் இருந்த ஆண் செவிலியர் மற்றும் ஓட்டுனர் பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த  மருத்துவர்கள், இருவரும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக  தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்