தமிழகத்திற்கு 14 கிலோ தங்கம் கடத்த முயற்சி - இருவர் கைது

இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு 14 கிலோ தங்கம் கடத்த முயன்ற இருவரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.
தமிழகத்திற்கு 14 கிலோ தங்கம் கடத்த முயற்சி - இருவர் கைது
x
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  மாதகல் கடற்பரப்பு பகுதியில் கடற்படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டிங்கி படகு ஒன்றை சோதனைக்குட்படுத்திய போது தங்கம் கடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் பின் 14 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து , கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், யாழ்ப்பாணத்தில் கொள்ளையடிக்கப்படும் நகைகளை , நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் உதவியால் மூலம் உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி தமிழகத்தில் விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்