லால்குடியில் 600 காளைகள், 400 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம், லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
லால்குடியில் 600 காளைகள், 400 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
திருச்சி மாவட்டம், லால்குடியில் நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். லால்குடி கீழவீதி, மகா மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டியில், திருச்சி, அரியலூர், மதுரை, புதுக்கோட்டை,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகளும், 400 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்