குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் சுற்றித் திரிந்த யானை - யானையை விரட்டிய வனத்துறை
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை நள்ளிரவில் சுற்றி திரிந்ததால்,பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை நள்ளிரவில் சுற்றி திரிந்ததால்,பொதுமக்கள் அச்சமடைந்தனர். மதுக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, வழி தவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. குனியமுத்தூர், இடையர்பாளையம், மாச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் யானை சுற்றி திரிந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை பார்த்தவுடன் இளைஞர்கள் பலர் செல்போனில் படம் பிடிப்பதற்கு ஆர்வம் காட்டிய யானை பின்தொடர்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
Next Story