சிவகங்கை : பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு - 2 பேர் கைது
சிவகங்கையில் பெண்களிடம் தொடர்ந்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையில் பெண்களிடம் தொடர்ந்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை சுற்றுவட்டார பகுதியில் சாலையில் செல்லும் பெண்களிடம் தங்க செயின்களை பறிக்கும் மர்ம நபர்கள், பைக்கில் தப்பிச் சென்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இது தொடர்பாக தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், பிரபுதேவா, சோனைகுமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story