14 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய பெண் - மங்களூரு பாதுகாப்பு மைய பராமரிப்பில் இருந்தவர் மீட்பு

மாயமான பெண் ஒருவர், 14 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் மற்றும் மகள்களுடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய பெண் - மங்களூரு பாதுகாப்பு மைய பராமரிப்பில் இருந்தவர் மீட்பு
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கஞ்சி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். அவர், கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார். அங்கு சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த ஜான் லூயிஸ் என்பவர், 14 ஆண்டுகளாக எந்த முகவரியும் இல்லாமல் ஒரு பெண் இருப்பது குறித்து அறிந்தார். ஜான் லூயிஸ் பேசியபோது, தனது ஊரின் விவரத்தை அந்த பெண் விவரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கஞ்சி கிராமத்தில் இருந்த பெண்ணின் மகளுக்கு, பாதிரியார்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மங்களூருவில் உள்ள ஒயிட் டவ் பாதுகாப்பு மையத்திற்கு சென்ற உறவினர்கள், 14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை பார்த்து கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்