இலவசமாக மது கொடுக்காததால் ஆத்திரம் - மார்க்கெட்டை சூறையாடிய ரவுடி கும்பல்
அரக்கோணம் மார்க்கெட்டில் ரவுடி கும்பல் மதுபாட்டில்களை சூறையாடி வாடிக்கையாளர்கள் மீது கல் வீசி தாக்கி ரகளையில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
அரக்கோணம் மார்க்கெட்டில் ரவுடி கும்பல் மதுபாட்டில்களை சூறையாடி, வாடிக்கையாளர்கள் மீது கல் வீசி தாக்கி ரகளையில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மார்க்கெட்டில் உள்ள மதுக்கடையில் ரவுடி கும்பல் இலவசமாக மது கேட்டு தொந்தரவு செய்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் மது கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த ரவுடி கும்பல், மது பாட்டில்களை அடித்து உடைத்து, ரகளையில் ஈடுபட்டுள்ளது. இதில், கோகுல் என்பவரை மட்டும் கைது செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து மற்ற 6 பேரை தேடி வருகின்றனர்.
Next Story