அரிவாளுடன் பண்ணையார் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் - பத்திரம், காசோலையில் கையொப்பம் பெற்ற 4 பேர் கைது

திருச்சி அருகே பயங்கர ஆயுதங்களுடன் பண்ணையாரிடம் முத்திரைத் தாள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரிவாளுடன் பண்ணையார் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் - பத்திரம், காசோலையில் கையொப்பம் பெற்ற 4 பேர் கைது
x
சமயபுரம் டோல்கேட் அடுத்த பிச்சாண்டர்கோயிலில் பண்ணையார் சிவகுமார், அவரது மனைவியுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பிச்சப்பா என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில், சிவகுமாரின் வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கும்பல், கழுத்தில் அரிவாளை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். அப்போது வந்த அவரது மனைவியின் கழுத்திலும் அரிவாளை வைத்து அறுத்துவிடுவோம் என கூறியதாக தெரிகிறது. நால்வரும் யார் என தெரியாத நிலையில், முத்திரை தாள் மற்றும் காசோலைகளில் கணவன், மனைவியிடம் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார், பிச்சையப்பா மகன் ரஞ்சித், தவமணி, ரவிச்சந்திரன், மகாலிங்கம் ஆகிய நால்வரை கைது செய்தனர். முக்கிய நபரான  பிச்சையப்பாவை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்