9 மற்றும் 7 வயது சிறுமிகள் கூட்டு பலாத்காரம் - ஒரு வருடமாக 2 சிறுமிகளை சீரழித்த 8 பேர்

உறவினர்கள் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
9 மற்றும் 7 வயது சிறுமிகள் கூட்டு பலாத்காரம் - ஒரு வருடமாக 2 சிறுமிகளை சீரழித்த 8 பேர்
x
உறவினர்கள் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

* 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து விட, திண்டிவனத்தில் உள்ள பாட்டி சிறுமிகளை வளர்த்துள்ளார். 2வது திருமணம் செய்துகொண்ட தாய், சென்னை வந்துவிட்டார். 

*மகள்களை பார்க்க, திண்டிவனம் சென்றபோது, சிறுமிகள் இருவரும் அம்மாவிடம் தேம்பி, தேம்பி அழுதபடியே தங்களை 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததை போட்டு உடைத்தனர். 

* இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், 8 பேரும் உறவினர்கள் என்பதால் விஷயத்தை மூடிமறைத்துள்ளார். அதோடு மகள்களை புதுச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளார். அங்கு இருவரின் உடலிலும் மாற்றம் ஏற்பட்டு நலிந்ததால், சிறுமிகளை விசாரித்த ஆசிரியர்கள், 8 பேர் நாசம் செய்ததை அறிந்து அதிர்ந்துள்ளனர். 

* உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு கொடுத்த தகவலை அடுத்து போலீசாரும் வந்துவிட, சிறுமிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் வாக்குமூலத்தை தொடர்ந்து, திண்டிவனம் போலீசார் உறவினர்கள் 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 



Next Story

மேலும் செய்திகள்