நெல்லையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலை மறியல்
சென்னையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து நெல்லை மேலப்பாளையம் மற்றும் பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து நெல்லை மேலப்பாளையம் மற்றும் பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story