குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் காட்டப்படாத ரூ.1.35 லட்சம் பறிமுதல் என தகவல்
கன்னியாகுமரியில் தனியார் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கன்னியாகுமரியில் தனியார் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த புகாரின் பேரில் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 700 ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குமுதாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story