கன்னியாகுமரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஏழு மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை
x
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஏழு மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது,  பணத்துடன் நின்று கொண்டிருந்த ரமேஷ் என்ற இடைத்தரகர் பணத்தை வீசிவிட்டு தப்பியோடினர். பணத்துடன் நின்று கொண்டிருந்த மற்றொரு தரகர் சத்யராஜிடமிருந்த அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார் என்பரிடமிருந்த, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 86ஆயிரத்து 590 ரூபாயை  கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்