டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : "சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியான பாதையில் செல்கிறது" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியான பாதையில் செல்கிறது - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
x
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை தற்போது  சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  நீதிபதிகள்  கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முறைகேட்டில் ஈடுபட்டது யார் ? எந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றது என தகுந்த விபரங்களுடன் குறிப்பிட்டு பொது நல மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்