"மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல் எப்போது?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னரே மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை, நடத்த முடியும் என தமிழக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்டால் தான் தேர்தல் அறிவிக்க முடியும் என்றார். இதனை தொடர்ந்து மாநகராட்சி , நகராட்சி பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தபடும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story