நீட் தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் : விரைவில் விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. திட்டம்

மாணவர்களுக்கு பதிலாக நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதியவர்களின் 10 பேர் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் : விரைவில் விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. திட்டம்
x
மாணவர்களுக்கு பதிலாக நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதியவர்களின் 10 பேர் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டுள்ளது. இந்த 10 மாணவ, மாணவிகளின் விவரங்கள் குறித்து டெல்லியில் உள்ள ஆதார் தலைமை அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. சார்பில் கடிதம் எழுதி விவரம் கேட்கப்பட்டு உள்ளது. இதனிடையே,10 பேரின் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு அவர்களை கண்டு பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் தொடர்பான விவரங்களை பெற சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் எழுத சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டு உள்ள நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விரைவில் விசாரணையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்