காவலாளி தாக்கியதில் நோயாளியை பார்க்க வந்தவர் உயிரிழப்பு ?

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனையில் காவலாளி தாக்கியதில் நோயாளியை பார்க்க வந்தவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காவலாளி தாக்கியதில் நோயாளியை பார்க்க வந்தவர் உயிரிழப்பு ?
x
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு பகுதியை சேர்ந்த மரிய சுரேஷ் என்பவர், கடந்த ஞாயிற்று கிழமையன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமியாரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த ரத்தினராஜ் என்பவருக்கும் மரிய சுரேஷ்-க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காவலாளி ரெத்தினராஜ், மரிய சுரேஷை தாக்கியதில், அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் தீ​விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மரிய சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் தலைமறைவான காவலாளி ரெத்தினராஜை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். 



Next Story

மேலும் செய்திகள்