சில்லறை வாங்குவது போல் நடித்து நூதன திருட்டு - ரூ.10,000 பணத்தை திருடிய ஈரானிய கொள்ளையர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் நோட்டை மாற்றுவது போல் நடித்து வியாபாரியிடம் நூதன கொள்ளையில் ஈடுபட்ட ஈரான் நாட்டு கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சில்லறை வாங்குவது போல் நடித்து நூதன திருட்டு - ரூ.10,000 பணத்தை திருடிய ஈரானிய கொள்ளையர்கள் கைது
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த வியாபாரி டேவிட் என்பவரிடம் இரு வெளிநாட்டு நபர்கள்  ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். வியாபாரி டேவிட்டும் சில்லறை கொடுத்தனுப்பிய சிறிது நேரத்தில்,  அவர் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் காணவில்லை. இதனையடுத்து, புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றிய பின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளது தெரிய வந்தது. 


Next Story

மேலும் செய்திகள்