மாணவர்- ஆசிரியர் விகிதாச்சார எண்ணிக்கையில் முரண்பாடு - மத்திய அரசுக்கு தமிழக அரசு தவறான தகவல்
தமிழகத்தில் பின்பற்றுபட்டு வரும் ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் குறித்து, மத்திய அரசுக்கு தமிழக அரசு தவறான தகவல் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பின்பற்றுப்பட்டு வரும் ஆசிரியர் மாணவர் விகிதாசாரத்தின்படி,1-ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியரும், நியமிக்கப்பட்டுள்ளனர். 9 ,10 வகுப்புகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் , 11,12 ம் வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் அமல்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் , 17 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், தமிழக அரசு ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் குறித்து,தவறான தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Next Story