பிளாஸ்டிக் பை பயன்பாடு - திடீர் சோதனை நடத்த உத்தரவு
பாலீத்தின் உள்ளிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க திடீர் சோதனைகள் நடத்துமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2019 ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு அமலானது.
* இது தொடர்பான அரசாணை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
* அப்போது அரசு தரப்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோயில்களில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு தடை வித்து சுற்றிக்கை அனுப்பி உள்ளதாகவும் கூறியது. மேலும் இது தொடர்பாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரியது.
* அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கோயில்கள், தர்க்காக்கள், தேவாலயங்களுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகளில் பூஜை பொருட்கள் விற்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
* அதை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துமாறும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க அறிவுறுத்துமாறும் கூறி, வழக்கை மார்ச் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Next Story