மாணவிகளிடம் தவறாக நடந்ததாக புகார் - தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை
பொள்ளாச்சி அருகே மாணவிகளிடம் தவறாக நடந்ததாக கூறப்படும் தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாகாளியப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் சில மாணவிகளிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாகாளியப்பனை கைது செய்ய கோரி பெற்றோர் நெகமம் - பல்லடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தும் சாலை மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரின் புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மாகாளியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story