"ஜீவனப்படி மறுப்பது உரிமை மீறல்" - 6 வாரங்களுக்குள் பரிசீலிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு, ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தின் உரிமை மீறிய செயல் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜீவனப்படி மறுப்பது உரிமை மீறல் - 6 வாரங்களுக்குள் பரிசீலிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
இளம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றிய இளங்கோ, கையாடல் குற்றச்சாட்டு காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த காலத்தில் ஜீவனப்படி வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனப்படியை முழுமையாக மறுப்பது என்பது, அரசியல் சாசனத்தின் தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டினார்கள். பின்னர், மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்