"சீன எஞ்சின் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை தேவை" - ஆட்சியரிடம் நாட்டுப்படகு மீனவர்கள் புகார் மனு
நாகையில் சீன எஞ்சின்களை பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
நாகையில் தடை செய்யப்பட்ட சீன எஞ்சின்களை பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பழையாரை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் சீன எஞ்சின்களை பயன்படுத்துவதால், மீன்வளம் அழிவதோடு, வருங்கால மீனவ சந்ததியினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story