மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை கைது செய்து போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை கைது செய்து போலீசார் விசாரணை
x
காமராஜர் நகரை சேர்ந்த வீராசாமி அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவி பாப்பாவுக்கும், அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. வீராசாமி சந்தேகத்தின் பேரில் அவ்வபோது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனிடையே,  இன்று அதிகாலை வீராசாமி தமது மனைவி பாப்பாவை, கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளி வீராசாமியை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்