கொரோனா : 2 சீனர்கள் உள்பட 4 பேருக்கு பாதிப்பு இல்லை - ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு தகவல்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு சீனர்கள் உள்பட 4 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு சீனர்கள் உள்பட 4 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களை தனி வார்டில் வைத்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் நான்கு பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதனால், அந்த நான்கு பேரும் இன்று மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story