வள்ளியூர் : தெப்ப திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை பணகுடி சிவகாமி அம்பாள் மற்றும் சிங்கபெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய தைப்பூச விழாவில், பத்து நாட்களாக கோவி
நெல்லை பணகுடி சிவகாமி அம்பாள் மற்றும் சிங்கபெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய தைப்பூச விழாவில், பத்து நாட்களாக கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பத்தாம் நாள் திருவிழாவில் சுவாமியும் அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் பணகுடி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

