அன்புச்செழியன் வீடு மற்றும் ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனத்தில் நிறைவடைந்தது வருமான வரித்துறை சோதனை

ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் இல்லத்தில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
அன்புச்செழியன் வீடு மற்றும் ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனத்தில் நிறைவடைந்தது வருமான வரித்துறை சோதனை
x
திநகரில் உள்ள ஏஜிஎஸ் பட தயாரிப்பு அலுவலகத்தில், கடந்த 5ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, நேற்று மாலை 4 மணியாடு நிறைவு பெற்றது. இதேபோல், 
திநகரில் உள்ள பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில், கடந்த 5ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இன்று அதிகாலை 02.30 மணி வரை நடைபெற்று முடிந்தது. அன்பச்செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது, பிகில் பட வசூலில் 300 கோடி ரூபாய் வருமானம் மறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சோதனையில் கைப்பெற்றப்பட்ட பணம், பண பரிவர்த்தன ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவைகளை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்