சுற்றுலா வேன், பேருந்து மோதி விபத்து - வெளிமாநிலத்தவர்கள் 3 பேர் உயிரிழப்பு

திருமங்கலத்தில் நின்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது, தனியார் பேருந்து மோதிய விபத்தில் அரியானா மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.
சுற்றுலா வேன், பேருந்து மோதி விபத்து - வெளிமாநிலத்தவர்கள் 3 பேர் உயிரிழப்பு
x
திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலை நேச நேரி விலக்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலை ஓரம் நிறுத்தப்பட்ட சுற்றுலா வேன் மீது, தனியார் பேருந்து பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில், 3 பெண்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விசாரணையில், அரியானா மாநிலம் சார்ஜர் மாவட்டத்தை சேர்ந்த 41 பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தது தெரியவந்தது. அரியானாவில் குதூகலமாக தொடங்கிய சுற்றுலா பயணம், விபத்தால், சோகத்தில் முடிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்