வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் - காலை 6-30 மணிக்கு முதல் ஜோதி தரிசனம்
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் இன்று விமர்சையாக நடைபெற உள்ளது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 149-வது தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு, முதல் ஜோதி தரிசனம் காலை 6-30 மணிக்கு நடைபெற உள்ளது. இதையடுத்து, 10 மணிக்கும், மதியம் 1-00 மணி மற்றும் இரவு 7-00, 10 மணிக்கும், மறுநாள் காலை 5.30 மணி என்று, 6 காலம், 7 திரைகளை நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு மது மற்றும் மாமிச கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
Next Story

