வேதாரண்யத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் முதல் சிறுதலைக்காடு வரை கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் முதல் சிறுதலைக்காடு வரை கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கடலோர காவல் படை டிஎஸ்பி குமார் தலைமையில் படகில் ரோந்து பணி நடைபெற்றது. கடல் வழியாக யாரும் ஊடுருவி வருகிறார்களா என்பதை சோதனை செய்வதற்காக இந்த நிகழ்வு நடைபெற்றது. மேலும் இதுதொடர்பாக மீனவர்களிடம் அதிகாரிகள் விளக்கினர். தொடர்ந்து நாளையும் சோதனை நடைபெற உள்ள நிலையில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Next Story

