உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் அவரவர் வீடுகளுக்கு தனிப்படை போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை
x
இந்த வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த தவ்பிக் மற்றும் சமீம் ஆகியோர்,கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த  காவல்துறை, அவர்களது வீடுகளுக்கு நேரில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் உள்ள  அப்துல் சமீம் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸ்,தாயார் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல  நாகர்கோவில் இளங்கடை பகுதியில் அமைந்துள்ள  தவ்பிக் வீட்டில் மற்றொரு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதோடு வீட்டில் சோதனையிட்டனர். விசாரணைக்கு பின்னர் இருவரும் மீண்டும் நேசமணிநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்