2021 - ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
2021 - ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
x
2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்பகல் ஒரு மணியளவில், நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, வீட்டில் உள்ள நபர்கள் எத்தனை பேர், அவர்களது பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்களா?, மற்றும், குழந்தைகளின் விவரம் உள்ளிட்ட 28 கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் காகித முறையில் நடைபெற்று வந்த கணக்கெடுப்பு பணி இந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்