"ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குரல் டெல்லிக்கு கேட்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குரல் டெல்லிக்கு கேட்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
இதுதொடர்பாக  அவர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தால், காவிரி விளைநிலப் பகுதிகள் பாலைவனமாகும் என தெரிவித்துள்ள ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனை காத்து, அவர்களுக்கு துணைநிற்பதில் திமுக உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மாநிலஅரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வரும் 28ம் தேதி 5 மாவட்டங்களில் நடைபெற உள்ள போராட்டத்தின் குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என அவர்  தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்