கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற வந்த சிவசேனா அமைப்பினர் 28 பேர் கைது

கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற வருகை தந்த சிவசேனா அமைப்பினர் 28 பேர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் கைது.
கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற வந்த சிவசேனா அமைப்பினர் 28 பேர் கைது
x
கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குடியரசு தினமான இன்று சிவசேனா அமைப்பின் மாநிலத் தலைவர் புலவன் போஸ் தலைமையில் சுமார் 28 பேர் கச்சத்தீவு சென்று தேசியக்கொடி ஏற்றுவதற்காக ராமேஸ்வரம் வந்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்து தனியார் மகாலில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்