"நடிகர் ரஜினிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்" : காவல்துறை ஆணையரிடம் மக்கள் மன்றத்தினர் கோரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு, துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திராவிடர் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடிகர் ரஜினிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் : காவல்துறை ஆணையரிடம் மக்கள் மன்றத்தினர் கோரிக்கை
x
கடந்த சில நாட்களுக்கு முன்பு, துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திராவிடர் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில்  சிலர் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிடி ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர். மேலும், ரஜினிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, கோவை மற்றும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கமிஷனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்