இன்று 71 வது குடியரசு தின கொண்டாட்டம் : மெரினாவில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினாவில் நடைபெறும் விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார்
இன்று 71 வது குடியரசு தின கொண்டாட்டம் : மெரினாவில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர்
x
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே, நடைபெறும் விழாவில், ஆளுநர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், முப்படை வீரர்கள், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இன்று காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கும் ஆளுநர், அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அதன்பிறகு, விருது வழங்கி, கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் பார்வையிடுகிறார். குடியரசு தின விழாவையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்