அரசியல் தலைவரையே மிஞ்சிய பாதுகாப்பு : தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு சிறப்பு ஏற்பாடு

அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு, அரசியல் தலைவரையே மிஞ்சிய பாதுகாப்பு கெடுபிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அரசியல் தலைவரையே மிஞ்சிய பாதுகாப்பு : தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு சிறப்பு ஏற்பாடு
x
அரக்கோணம் ரயில் நிலையத்தில் தென்னக கோட்டை பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மாலை 4.20க்கு வருவார் என அறிவித்த நிலையில், மாலை 6 மணிக்கு  தாமதமாக வந்தார். அங்கிருந்த புதிய டிக்கெட் கவுண்டரை ஜான் தாமஸ் பார்வையிட்டார். அப்போது ரயில்வே பாதுகாப்பு படையினர், இருப் பக்கமும் கயிறுகளை பிடித்தவாறு பொதுமக்களை நெருங்க விடாமல் தடுத்தனர். இதனால் பொதுமக்களும், ரயில்வே பயணிகள் சங்கத்தினரும் எந்த ஒரு புகாரையும், குறைகளையும் பொது மேலாளரிடம் தெரிவிக்க முடியவில்லை. மேலும் அவர் வருகையை ஒட்டி அரக்கோணம் சுற்றியுள்ள பகுதியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து அதை ரயில்வே புதிய டிக்கெட் முன்பு அதிகாரிகள் நிறுத்தினர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 


Next Story

மேலும் செய்திகள்