வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி - திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் மீட்பு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி - திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் மீட்பு
x
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த 21ம் தேதி முதல் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரள மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டது.  தொடர்ந்து, இருவரையும் கேரளாவிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே வீசியதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த இடத்திற்கு இருவரையும் அழைத்து சென்ற போலீசார், கத்தியை கண்டுபிடித்து கைப்பற்றினர். ரத்தக்கறை படிந்த அந்த கத்தி தான், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்