மத்திய சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் : ஜெயிலர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக ஜெயிலர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் : ஜெயிலர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
திருச்சி மத்திய சிறையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆனந்தன் , ஸ்ரீதர் என்ற 2 கைதிகளை, சீருடை அணியாத காவலர்கள் கடுமையாக தாக்கியதாகவும், இதை தட்டி கேட்ட திருச்செல்வம், முனியசாமி என்ற கைதிகளையும் காவலர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.  இதில் பலத்த காயமடைந்த முனியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது முனியசாமி திருச்சி குற்றவியல்  நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட சிறை காவலர்கள் புண்ணியமூர்த்தி, முருகானந்தம், ஜெயிலர் ரமேஷ் மற்றும் சிறை மருத்துவர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்