விருதுநகர் : ஸ்கிப்பிங் போட்டியில் பள்ளி மாணவி உலக சாதனை

விருதுநகரில் பள்ளி மாணவி ஒருவர் ஸ்கிப்பிங் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் : ஸ்கிப்பிங் போட்டியில் பள்ளி மாணவி உலக சாதனை
x
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஷகித்யாதரிணி. கடந்த 3 மாதங்களாக ஸ்கிப்பிங் போட்டியில் பயிற்சி பெற்று வந்த இவர், இந்த போட்டியில் சாதனை படைக்க வேண்டும் என விரும்பியுள்ளார். 

இதற்காக ஒரு அடி உயர நாற்காலி முதல் படிப்படியாக 4 அடி உயர நாற்காலியின் மீது ஏறி நின்று ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொண்டார். 

இந்த நிலையில் பாக்ஸர் ஸ்டெப், கிராஷர் உள்ளிட்ட 50 வகையான ஸ்கிப்பிங்கை 2020 முறை செய்து உலக சாதனை படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்