பட்டப் பகலில் மீன் வியாபாரியிடம் வழிப்பறி : 12 மணி நேரத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது

கும்பகோணம் அருகே பட்டப் பகலில் மீன் வியாபாரியிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் 4பேரை, 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
பட்டப் பகலில் மீன் வியாபாரியிடம்  வழிப்பறி : 12 மணி நேரத்தில்  கொள்ளையர்கள் 4 பேர் கைது
x
கும்பகோணம் அருகே பட்டப் பகலில் மீன் வியாபாரியிடம்  வழிப்பறி செய்த கொள்ளையர்கள்  4பேரை, 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். திம்மக்குடியை சேர்ந்த வியாபாரி சங்கர், கும்பகோணம் சந்தைக்கு மீன்வாங்க பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது யாரும் இல்லாத பகுதியில் அவரை வழி மறித்த 4 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் தாக்கி, 17 ஆயிரம் ரொக்கம்,  செல்போன் மற்றும் இருசக்கர வாகன சாவியினையும் பறித்துக் கொண்டு தப்பியது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட தாராசுரம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்,  முகேஷ் ஜெகதீஷ், அடால்ஃப் ஹிட்லர் ஆகிய 4 பேரை போலீசார் கைது  செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்