அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நாசம் : நெற்பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

நாகை மாவட்டம், ஐவநல்லூரில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நாசம் : நெற்பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
x
நாகை மாவட்டம், ஐவநல்லூரில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அந்த ஊரில் சுமார் 500 ஏக்கரில் பி.பி.டி. என்னும் நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதமாக்கியுள்ளன. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்