முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்பி. வேலுமணி, சிவி சண்முகம், கடம்பூர் ராஜூ, எம்.ஆர். விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் , ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Next Story