"பாலம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும்" - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
பவானிசாகர் அணை அருகேயுள்ள பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக 8 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய பாலம் கட்டுவதற்காக பல மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில், புதிய பாலம் கட்டும் பணியை ஓப்பந்ததாரர்கள் இதுவரை தொடங்காததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.உடனடியாக புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்