கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்
x
தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த முத்துலட்சுமி,  அவரின் மூன்று குழந்தைகளை கணவன் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தப்பிக்க ராமேஸ்வரம் வந்த அந்த பெண், கோயில் வாசலில் மூன்று குழந்தைகளுடன் பிச்சை எடுத்து வந்துள்ளார்.  பக்தர்கள் கொடுக்கும் உணவுகளை, குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் பசியாற்றி வருகிறார். இதை கண்காணித்த குற்றப்பிரிவு போலீசார், அந்த பெண்ணை அழைத்து விசார​ணை நடத்தினர். உண்மை அறிந்த போலீசார், முத்துலட்சுமி, அவரின் மூன்று குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். தன்னையும், தனது குழந்தையையும் பாதுகாப்பு செய்த காவல்துறைக்கு அந்த தாய் நன்றி தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்