"குரூப் 1 தேர்வு, இன்று முதல் விண்ணப்பம்" - அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் ஒன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது
குரூப் 1 தேர்வு, இன்று முதல் விண்ணப்பம் - அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
x
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் பிப்ரவரி 19 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குரூப் ஒன் தேர்விற்கான தகுதி இட ஒதுக்கீடு தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in ஆகிய இணைய தளங்களில் பார்த்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப் ஒன்றுக்கான முதல்நிலை  எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்