நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து - 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்கு உள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து - 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
x
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த  ஐசக் என்பவர் கார் மீது  சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து  மோதியது . இதையடுத்து ஐசக் காரை நிறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த  தனியார் சொகுசு பேருந்து,   சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியது.  இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஐசக் மற்றும் அறந்தாங்கியை சேர்ந்த வெள்ளைச்சாமி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சர்குணம் ஆகிய 3 பேர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 20 பயணிகள்  சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்