வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய விவகாரம் : 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

வாளால் பிறந்தநாள் கேக் வெட்டிய விவகாரத்தில், சட்டக் கல்லூரி மாணவர் தலைமறைவான நிலையில், அவரின் நண்பர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய விவகாரம் : 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை
x
சென்னை, மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியை சேர்ந்தவர் காமேஷ். திருப்பதியில், சட்டம் படித்துவரும் அவர், சில நாட்களுக்கு முன் அவரது பிறந்த நாளை, சாலையில் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது, ரூபாய் நோட்டுகளால் மாலை, மலர் கிரீடம் அணிந்து, வாளால் கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, போலீசார் தேடிய நிலையில், காமேஷ் மற்றும் அவருக்கு வாள் பரிசளித்த நபரும் தலைமறைவாகினர். இந்த நிலையில், வீடியோ  காட்சிகளின் அடிப்படையில் காமேஷின் நண்பர்கள் ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்