பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது
பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் பிளாஸ்டிக் குழாய்களுடன் சத்தமிட்டபடியே உலா வந்தனர். நடந்து செல்பவர்களை அச்சுறுத்தம் வகையில் அவர்கள் ரகளை ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது . அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த முத்து, புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், விஜி, நவீன் குமார், மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story