வி.ஐ.டி பல்கலை.யில் பலூன் மூலம் செயற்கை கோள் செலுத்தும் நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பலூன் மூலம் செயற்கை கோள் செலுத்தும் நிகழ்ச்சி, பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பலூன் மூலம் செயற்கை கோள் செலுத்தும் நிகழ்ச்சி, பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து எந்த அவசர முடிவையும் எடுக்க முடியாது என்றும், பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு தான் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story